top of page

மனம் vs உடலற்ற ஆன்மா

2.7.2015

கேள்வி: ஐயா, மனம் உடலற்ற ஆத்மாவில் செயல்படுமா?


பதில்: உடல் என்பது வன்பொருள் போன்றது. மனம் என்பது மென்பொருள் போன்றது. வன்பொருள் இல்லாமல் மென்பொருள் வேலை செய்ய முடியாது. மென்பொருள் இல்லாமல் வன்பொருளால் பயனில்லை.


மனித மனம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.

1. புற மனம் (conscious mind)

2. நடு மனம் (subconscious mind)

3. அடி மனம் (super conscious mind)


இந்த மூன்றில், அடி மனம் தான் கர்ம பதிவுகளை சுமந்திருக்கும் ஆத்மா ஆகும்.


மரணம் நிகழும்போது, ​புற மனமும் நடு மனமும் செயல்படுவதை நிறுத்திவிடுகிறது. கர்ம பதிவுகளுடன் ஆத்மா உடலுக்கு வெளியே செல்கிறது. கர்ம பதிவுகள் விதைகளைப் போன்றவை. விதைகள் மரங்களாக மாற, மண் தேவை. அதேபோல், கர்ம பதிவுகள் வெளிப்படுவதற்கு, உடல் தேவைப்படுகிறது.


பெரும்பாலான மக்கள் நடு மனதையும் அடி மனதையும் அறிந்திருக்க மாட்டார்கள். மனதின் இந்த இரண்டு நிலைகளும் அவர்களில் விழிப்புணர்வற்ற மனங்களாக செயல்படுகின்றன. அவர்கள் உடலை விட்டு வெளியேறும்போது, ​​அவர்களின் ஆத்மாக்கள் தூங்குவது போல அறியாமையில் மிதந்து கொண்டிக்கும். அவர்களின் ஆத்மாக்கள் மற்றவர்களின் உடல்களில் விழிப்புணர்வு இல்லாமல் இணையும்.


நீங்கள் உடலில் இருக்கும்போது அடிமன நிலையை அடைந்திருந்தால், உடலை விட்டு வெளியேறிய பிறகு உங்கள் ஆன்மா விழிப்புடன் இருக்கும். அதன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அது பொருத்தமான உடலை விழிப்புணர்வோடு தேர்ந்தெடுக்கும். சாதாரண சிற்றின்பத்திலிருந்து ஞானம் அடைதல் வரை நீங்கள் எதை அடைய விரும்பினாலும், உங்களுக்கு உடல் தேவை. உடல் இல்லாமல் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. எனவே உடல் மிகவும் விலைமதிப்பற்றது.


காலை வணக்கம்... உங்கள் விலைமதிப்பற்ற உடலைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்ளுங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

154 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page