top of page

தேவையற்ற எண்ணங்கள்

30.6.2015

கேள்வி: ஐயா நம் எண்ணங்களை எவ்வாறு தெளிவாக வைத்திருப்பது? தேவையற்ற விஷயங்கள் நம் மனதில் ஏன் பிரதிபலிக்கின்றன? நான் சிலரைப் பார்க்கும்போது அல்லது அவர்களைப் பற்றி நினைக்கும் போது தொந்தரவு அல்லது எரிச்சல் அடையக் கூடாது என்றால், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? எனது சிந்தனை மட்டத்தில் அதை எவ்வாறு மாற்றுவது? நாம் நினைக்கும் போது கடந்து வந்த அதே அதிர்வெண்ணிற்கு மனம் ஏன் செல்கிறது? ஆழமாக வேரூன்றியிருக்கும் அந்த பதிவுகளை எவ்வாறு அகற்றுவது?


பதில்: தேவையற்ற எண்ணங்களில் மூன்று வகைகள் உள்ளன.


1. நீங்கள் அனுபவித்த வலி தொடர்பான எண்ணங்கள்.

2. குற்ற உணர்விலிருந்து வரும் எண்ணங்கள்.

3. தனக்கோ அல்லது பிறருக்கோ வலியை உருவாக்கும் எண்ணங்கள்.


இந்த தேவையற்ற எண்ணங்களை நீங்கள் அடக்குகிறீர்கள், அவை உங்கள் மனதின் விழிப்புணர்வற்ற மற்றும் இருண்ட பக்கத்திற்குச் செல்கின்றன. இந்த ஆழமான நிலையில் அவை மறைக்கப்பட்டுள்ளன. இன்பப் பதிவுகளை விட துன்பப்பதிவுகள் மிகவும் வலிமையானவை. ஆழ்நிலையில் மறைந்திருப்பதை மற்றவர்கள் தொடுவதால் ஆழ்நிலையில் நீங்கள் வலியை உணர்கிறீர்கள்.


நீங்கள் மறைத்து வைத்திருப்பது காயமடைந்துள்ளது. அதைத் தொடும்போது உங்களுக்கு வலி ஏற்படும். காயம் இருண்ட பக்கத்தில் இருப்பதால், நீங்கள் அதை அறிந்திருப்பதில்லை. ஒரு நபர் அல்லது ஒரு சூழ்நிலை மூலம் நீங்கள் உள்ளே ஒரு காயம் இருப்பதை அறிந்து கொள்வீர்கள். ஒரு நபர் அல்லது சூழ்நிலை ஒரு கண்ணாடி போன்றது. அவைகள் உங்களுக்குள் மறைந்திருப்பதை பிரதிபலிக்கின்றன.


நீங்கள் கண்ணாடியில் அழகாக பிரதிபலிக்கவில்லை என்றால், அது கண்ணாடியின் தவறு அல்ல. தவறு உங்களிடம் உள்ளது. கண்ணாடியைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் அழகாக மாற முடியாது. கண்ணாடியைப் பயன்படுத்தி, காயங்களைக் கண்டுபிடித்து அவற்றை குணப்படுத்த முயற்சியுங்கள் . காயங்கள் குணமான பிறகு, நீங்கள் கண்ணாடியில் அழகாக பிரதிபலிப்பீர்கள்.


நீங்கள் எதையாவது நினைக்கும் போது, ​​உங்கள் மனம் அதே அதிர்வெண்ணிற்கு செல்கிறது. ஏனென்றால் அதுதான் மனதின் இயல்பு. அந்த வலி நிகழ்வுகளை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைக்கிறீர்கள், ஏனென்றால் காயம் இன்னும் உள்ளது. அரிப்பு உள்ளது. அவைகளுக்கு உங்கள் கவனம் தேவை.


விழிப்புணர்வு தான் மருந்து. விழிப்புணர்வு என்பது ஒளி. காயத்தை வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தினால், அது குணமாகும்.


காலை வணக்கம் ... காயங்களைப் பற்றி விழிப்பாக இருங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

150 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page