top of page

சாமர்த்தியம் vs சாதனை

1.8.2015

கேள்வி: ஹலோ, ஞானமடைந்த அனைவருமே சாதனையால் அதை அடைந்தார்களே தவிர, சாமர்த்தியத்தின் மூலமாக அல்ல. சாமர்த்தியம் என்பது திடீரென்று மனதில் பளிச்சிடக்கூடியது. . அது விரும்பிய இலக்கை அடைய உதவக்கூடும், ஆனால் ஞானமடைய உதவாது என்பது என் கருத்து. இந்த கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால், தயவுசெய்து சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி ஞானம் அடைந்தவர்களின் பெயர்களை மேற்கோள் காட்டுங்கள். சரியா?


பதில்: சாதனை தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. சாதனையுடன் சாமர்த்தியமும் அவசியம் என்று கூறியுள்ளேன். ஆம். உங்கள் இலக்குடன் நீங்கள் சரியாக ஒத்திசையும் போது மனதில் பளிச்சிடும் ஒரு விஷயம் தான் சாமர்த்தியம். அதை உங்கள் சாதனையில் பயன்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட அனைத்து ஞானிகளின் பெயர்களையும் நான் மேற்கோள் காட்ட வேண்டும்.


கிட்டத்தட்ட ஞானமடைந்த அனைவருமே ஒரு குருவினிடமிருந்து தீட்சை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குருக்களால் கற்பிக்கப்பட்ட சில நுட்பங்களைப் பயிற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஞானமடைந்த பிறகு, அவர்கள் அதே நுட்பத்தை தங்கள் சீடர்களுக்கு கற்பிக்கவில்லை. அவர்கள் முற்றிலும் புதிய நுட்பங்களை அல்லது மாற்றியமைக்கப்பட்ட நுட்பங்களை கற்பித்திருக்கிறார்கள்.


அக்கால புத்தர்கள் முதல் இக்கால குருமார்கள் வரை இதுதான் நடந்துள்ளது. இது அவர்கள் அவர்களின் குருமார்களின் நுட்பங்களைத் தவிர தங்களுடைய சொந்த வழியைக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. நான் அவர்களின் சொந்த வழியைதான் சாமர்த்தியம் என்று அழைக்கிறேன். இது ஒரு புதிய பரிமாணம்.


காலை வணக்கம் .... உங்கள் சொந்த வழியைக் கொண்டிருங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்


103 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page