top of page

நிரந்தரமாக இருப்பது எப்படி?

18.7.2015

கேள்வி: ஐயா, எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆன்மாவின் கலவை என்ன? ... ஆன்மாவுக்கும் உயிர் சக்திக்கும் அல்லது துகள்களுக்கும் என்ன வித்தியாசம் ... பிரபஞ்சத்தில் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டு இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரமாக இருப்பது எப்படி? நான் ஊன் உடலைத் தக்கவைத்துக்கொள்வது பற்றி பேசவில்லை, ஆனால் மற்ற 2 உடல்களைத் தக்கவைத்துக்கொள்வது பற்றி பேசுகிறேன்.


பதில்: ஆன்மா என்பது சீவகாந்த சக்தியில் ஏற்படும் முத்திரைகளின் தொகுப்பாகும். இது காரண உடல் என்று அழைக்கப்படுகிறது. உயிர் சக்தி என்பது அடிப்படை ஆற்றல் துகள். இந்த துகள்கள் உடல் முழுவதும் சுழன்றோடிக்கொண்டிருக்கிறது. இது சூக்கும உடல் என்று அழைக்கப்படுகிறது. பரு உடல் என்பது கோடிக்கணக்கான உயிரணுக்களின் தொகுப்பாகும். இந்த மூன்று உடல்களும் அழிந்துவிடுகின்றன.


இவற்றை நீங்கள் நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. ஆனால் சில யோக நடைமுறைகளால் நீங்கள் கால அளவை நீட்டிக்க முடியும். மனித வாழ்க்கையின் நோக்கம் அடையாளத்தை அழிப்பதாகும். அடையாளம் உங்களை முழுமையிலிருந்து வேறுபடுத்துகிறது. உங்கள் அடையாளம் கலைக்கப்படும் போது. நீங்கள் முழுமையுடன் ஒன்றாகிறீர்கள். முழுமை சமூகத்திற்கு சேவை செய்ய உங்கள் உடலைப் பயன்படுத்தும். சமுதாயத்திற்கான பங்களிப்பு அதிகமாகவும் எல்லா காலத்திற்கும் பயனுள்ளதாகவும் இருந்தால், உங்கள் பெயர் நிலைத்து இருக்கும்.


காலை வணக்கம் ... நிலைத்து இருக்க கரைந்துவிடுங்கள்.💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

96 views0 comments

Recent Posts

See All

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page