top of page

தூக்கமும் கனவுகளும்

7.4.2017

கேள்வி: ஐயா .. இப்போதெல்லாம், கண்களை மூடியவுடன் 15 முதல் 30 வினாடிகளுக்குள் எனக்கு கனவுகள் வருகின்றன .. ஏன் இப்படி? இரவு தூக்கத்தின் போது எனக்கு கனவுகள் வருவதில்லை. ஆனால் பகல் நேரத்தில் நான் கண்களை மூடியவுடன் .. எனக்கு கனவு வருகிறது. கனவைப் பின்பற்றினால் நான் தூங்கிவிடுகிறேன். எனது தூக்க நேரம் 6 மணி நேரம். முன்பெல்லாம் நான் 8 மணி நேரம் தூங்குவேன் .. இதுதான் பிரச்சனையாக இருக்குமா?


பதில்: ஆம். போதிய தூக்கமின்மையே இப்பிரச்சினைக்கு காரணம். பொதுவாக, நீங்கள் இரவில் தூங்கும்போது, முழுமையான விழிப்போ அல்லது முழுமையான தூங்கமோ இல்லாத நிலையில் கனவுகள் வரும். இரவில் போதுமான அளவு தூங்காததால், பகல் நேரத்தில் கண்களை மூடும் போதெல்லாம், நீங்கள் தூக்க நிலைக்குச் செல்வீர்கள். ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் முன், உங்களுக்கு கனவுகள் வரும். இது மிகவும் இயற்கையானது.


ஆனால் நீங்கள் அதிக சோர்வாக இருப்பதால் இரவில் உங்களுக்கு கனவுகள் வரூவதில்லை. எனவே, நீங்கள் படுக்கையில் படுத்தவுடன் தூங்கிவிடுகிறீர்கள். திடீரென்று இரண்டு மணி நேர தூக்கத்தை குறைக்க வேண்டாம். மாறாக, 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், ஒரு மணிநேரம் என்றவகையில் குறைத்தால், உங்கள் உடல் அதற்கேற்ப தன்னை சரிசெய்துக்கொள்ள திட்டமிடும். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் உடலையும் மனதையும் விழிப்புணர்வோடு ஓய்வுப்படுத்தினால், உங்கள் தூக்க நேரம் தானாகவே குறைந்துவிடும்.


படுக்கைக்குச் செல்வதற்கு முன் செய்யும் 30 நிமிட தியானமும் உங்கள் தூக்கத்தைக் குறைக்கும். ஏனெனில், தியானம் என்பது தூங்காமல் தூங்குவதாகும். நீங்கள் உங்கள் உடலையும் மனதையும் தளர்த்தி தியானத்தின் போது ஆற்றலைப் பெறுவீர்கள். எனவே, குறைந்த தூக்கம் போதுமானதாக இருக்கும்.


காலை வணக்கம்... தூங்காமல் தூங்கு ...💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும் 


105 views1 comment

Recent Posts

See All

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page