15.7.2015
கேள்வி: ஐயா, சாதாரண மனிதர்களுடன் ஒப்பிடும்போது உணர்திறன் உடையவர்கள் ஏன் விரைவில் காயப்படுகிறார்கள்? அது அவர்களின் பிறந்த குணமா? உணர்திறன் ஒரு பலவீனமா?
பதில்: உணர்திறன் என்பது அறிவின் தரம். நீங்கள் அதிக உணர்திறன் உடையவராக இருந்தால், நீங்கள் அதிக உணர்வுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிலர் சாதாரண மக்களை விட அதிக உணர்திறனுடன் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் யார் வேண்டுமானாலும் அதை வளர்த்துக்கொள்ள முடியும். உணர்திறன் நுட்பமானது. உணர்வற்ற தன்மை முரடானது. நீங்கள் எவ்வளவு உணர்திறன் உடையவராக இருக்கிறீர்களோ, அவ்வளவு நுணுக்கமாகவும், மென்மையாகவும் மாறுகிறீர்கள்.
உணர்திறன் பலவீனம் அல்ல. இது பாதிக்கப்படக்கூடியது, பாதுகாப்பு இல்லாமல் ஒரு பூவைப் போல மென்மையானது. ஒரு பிளாஸ்டிக் மலர் கடினமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நீங்கள் அதை காயப்படுத்த முடியாது. ஆனால் உண்மையான மலர் மென்மையானது மற்றும் அதிக உணர்திறன் கொண்டது. யார் வேண்டுமானாலும் அதை காயப்படுத்தலாம்.
காயப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1. பாதிப்பு
2. புண்
நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, உங்கள் உணர்திறன் அதிகரிக்கிறது, நீங்கள் விழிப்புடன் இருப்பீர்கள். நீங்கள் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடுகிறீர்கள். சாதாரண மக்கள் குறைந்த உணர்திறன் உடையவர்கள். அவர்கள் உங்களில் உள்ள வித்தியாசத்தைக் காண்கிறார்கள். தாழ்வு மனப்பான்மை காரணமாக அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உங்களை காயப்படுத்தக்கூடும். அல்லது அவர்கள் உங்களிடமிருந்து விலகிவிடுவார்கள். நீங்கள் சாதாரண மக்களிடம் இரக்கமுள்ளவராக இருந்தால், அவர்களும் அதிக உணர்திறன் உடையவர்களாக மாறுவார்கள். எல்லா மனிதர்களும் அதிக உணர்திறன் உடையவர்களாக மாற வேண்டும்.
உங்கள் மனம் புண்பட்டிருந்தால், விரைவில் காயப்படுவீர்கள். திறந்த தன்மை காரணமாக. புண்ணைச் சுற்றியுள்ள புறை விழுந்துவிட்டது. அதனால்தான் நீங்கள் விரைவில் காயத்தை உணர முடிகிறது. குறைவான உணர்திறன் உள்ளவர்கள் விரைவில் காயமடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் புண்ணைச் சுற்றி பல அடுக்குகள் புறை உள்ளன. அவர்கள் அதைப் பாதுகாக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு புண்கள் இல்லை என்று நினைக்கிறார்கள்.
விரைவில் காயமடைந்தால் நல்லது. ஏனென்றால் நீங்கள் புண்ணை உணர முடிகிறது. புண்னை நீங்கள் ஏற்றுக்கொண்டு கவனித்தால், அது குணமாகும். யார் வேண்டுமானாலும் பூவைத் தொட்டு காயப்படுத்தலாம். உங்கள் உணர்திறன் வளரும்போது, அடுத்த கட்டத்திற்கு நீங்கள் மாற்றப்படுவீர்கள். நீங்கள் காற்று போல மென்மையாகி விடுவீர்கள். யாரும் காற்றைத் தொட்டு காயப்படுத்த முடியாது. ஆனால் காற்று அனைவரையும் தொடும்.
காலை வணக்கம் .... காற்றைப் போல இருங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comentários